எழுதிய கடிதம்

இடுகையிட்டது dinesh ஞாயிறு, 14 ஜூன், 2009

ஆர்வம் அலை பாய
ஐன்னலின் கதவிடுக்கில்
சந்தித்து படித்த
நேற்றைய செய்தித்தாள்
இன்றைக்கு பழசு.

அன்பானவளே......
பத்தாண்டுகளுக்கு முன்
செப்டம்பர் ஐந்தில் நீ
எழுதிய கடிதம்
இன்றைக்கு புதுசு..

எப்படி மறப்பேன்

இடுகையிட்டது dinesh புதன், 6 மே, 2009

எல்லா ஊதுபத்தியும்
எரிந்த பிறகும்
அட்டை பெட்டியில்
ஒட்டி இருக்கிறது
ஊதுபத்தி வாசம்

பூக்கள் எல்லாம்
பறிக்கப்பட்ட பிறகும்
பூங்காவில் தவழ்கிறது
பூ வாசம்

எத்தனைமுறை
கழுவினாலும்
எண்ணை பசை
சுமக்கிறது,நேற்றைய பொழுதில்
ஏற்றிய தீபம்

எல்லாவற்றிலுமே
இருக்கின்றன
பழைய நினைவுகளின்
பதிவுகள்

மணமாகி விட்டதால்
மறந்துவிடு
என்கிறாயே
எப்படி மறப்பேன்
நான் மட்டும்
உன்னை?

தனித்த இரவுகளில்

இடுகையிட்டது dinesh செவ்வாய், 5 மே, 2009

பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக..

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களக..

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணிரக..

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதிதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல் காதலாக..

புன்னகையை சிந்துகிறாய்

இடுகையிட்டது dinesh

அழகிய
புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன்
என்கிறாய் நீ

உன் கூந்தலில்
ஒரு ஒற்றை
ரோஜாவை
சூடி விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா
மலர்ந்திருக்கிறது
என்கிறேன் நான்

பவித்திரமானதொரு
புன்னகையை
சிந்துகிறாய்
தரையெங்கும்
மல்லிகைபூக்க்ள்
சிதறுகின்றன.

அதிகம் விரும்புவேன்

இடுகையிட்டது dinesh

நிலவின் அழகைவிட
அமைதியைத்தான்
அதிகம்
விரும்புவேன்

மழைத்துளியின்
அழகைவிட
மண்வாசனையைத்தான்
அதிகம்
விரும்புவேன்

மல்லிகையின்
அழகைவிட
மணத்தைதான்
அதிகம்
விரும்புவேன்

என்றுமே
அழகை மட்டும்
வைத்து எதையும்
ரசித்ததில்லை

முதல் முறையாக
ரசிக்கிறேன்
பூவைவிட
மெல்லிய உன்
அழகிய மனதை!

அறியாத விழிகள்

இடுகையிட்டது dinesh

சாலையோர பூக்கள் ரசிக்கும்
மனது
பட்டாம் பூச்சியாய்
சுற்றித்திரியும் வாழ்க்கை

கண்ணீருக்கு கூட அர்த்தம்
அறியாத விழிகள்
எப்போதும் என்னுடன்
இருக்கும் உதட்டோர
குறும்பு புன்னகை

மழலை மொழிரசிக்கும்
நெஞ்சம்
இரவு நேர மெல்லிசை
இளமை கால
இலட்சியங்கள்

இவை எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு உன்
கதலுக்காக
காத்திருக்கும் போது
உணருகிறேன்.

உன் "சம்மதம்" என்கிற
ஒற்றை வார்த்தையால்
திருப்பி தர முடியுமா?
சுயம் தொலையாத என்னை!

காதல் கடிதங்கள்

இடுகையிட்டது dinesh ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

அன்று
நீ எனக்கும்
நான் உனக்கும்
எழுதிய காதல் கடிதங்கள்
கலையாத
கனவுகாளாய்..!

மனதில்
புதைந்து போயிருந்த
உணர்வுகளை
பேனா மையில்
கொட்டி தீர்த்து குதுகலித்த
காகித
காலங்களாய்..!

கொட்டும்
மழையில் நீ நனையாமலிருக்க
நனைந்துகொண்ட
ஈரமான
நினைவுகளாய்..!

ஆம்
பாட்டும்
கூத்தும் பரவசமும் நிறைந்த
அந்நாளில்
உன் வார்த்தை மகுடிக்குள்
பெட்டி பாம்பாய்
என்னை அடக்கி வைத்து ரசித்த
அதிசயம் நீ..!

இன்று
அதே ஊரில் நானும்
கரிசல் மண்ணில்
உன் நினைவுகளும்
ஆனால்
நீ மட்டும் இல்லை.!!

உன்னை மட்டுமா இழந்தேன்

இடுகையிட்டது dinesh புதன், 15 ஏப்ரல், 2009

உன்னை மட்டுமா
நான் இழந்தேன்..?
என்னையுமல்லவா
இழந்துவிட்டேன்!

கடந்துவிட்ட ரயிலுக்கும்
கைவிட்ட காதலுக்கும்
வருந்தித் துருப்பிடித்துச்
சாவது
ஒருக்காலும் உசிதமல்ல
நானும் போய்
காத்திருக்க வேண்டும்

என் பிரியக் காதலியே
நீ வேண்டாம் இன்றெனக்கு
மீண்டும்
நான்தான் வேண்டும் எனக்கு

பிறப்புச் சூட்சமம்
உரைக்கும் நியதிப்படி
மறுப்பவர்கள் அல்ல-ஆண்கள்
கொடுப்பவர்கள்தாம்

ஓர்
உயிரைக் கருக்கொள்ள
பலகோடி உயிரணுக்களைக்
கணக்கின்றி
செலவிடுகிறான் ஆண்
ஒற்றைக் கருமுட்டையோடு
சிக்கனமாய் நிற்கிறாள்
பெண்

நீ! பின்னுக்குப் போனால்
வாழ்க்கை
மண்ணாகிப் போகும்
உன்
கண்ணுக்கு முன்னே
போராடு

மெளனமாகவே
என் வேர்களும் விழுதுகளும்
உன்னில் படர்ந்து
உன் நினைவுகளை
எனக்கெனவே
இன்னமும்
உறிஞ்சிக் கொண்டிருக்கும்
உண்மை
எனக்குக் கேட்காததா!

விழிகளை பறித்தவள்

இடுகையிட்டது dinesh

தென்றலாய்.
வந்தென்னை
தீண்டியவள் நீ!
மின்னலாய் வந்தென்தன்
விழிகளை பறித்தவள் .நீ!

கவியாக மாறி எனக்குள்
காதலை சொன்னவள் நீ!
உடலோடு ஒட்டிய
உயிரானவள் நீ!

உதயத்தின் கீற்றாகி
ஒளி கொடுத்தவள் நீ!
வானத்து நிலாவாகி எனக்குள்
வந்துதித்தவள் நீ!

பெண் என்ற சொல்லுக்கு
பெருமை இட்டவள் நீ!
நட்ப் பென்ற சொல்லுக்கு
நம்பிக்கை இட்டவள் நீ!

புமியிலே காதலை பரப்பி
விட்டவள் நீ!
என்தன் விழிகளிற்க்கு ஒளியாகி
பார்வை இட்டவள் நீ!

சிலுவையாய் உன் நினைவுகளை
என்னில் சுமக்க விட்டவள் நீ!
இத்தனையும் செய்தவளே!
ஏனடி!
இன்றென்னை வெறுத்தாய்..?

என் நினைவுகளை எறிந்தாய்..?
எனை கண்ணீரில்
வாழ விட்டு
எனை ஏண்டி மறந்தாய்.?

இவளது நினைப்பாள்

இடுகையிட்டது dinesh

மயிலிறகின் தொடுதல்
மென்மையானது
என்கிறார்கள்
இசையின் ஸ்வரங்கள்
இனிமையென்று
சொல்கிறார்கள்..
இவர்களுக்கெல்லாம்
எப்படி புரியவைப்பது.?
என்னவள் புன்சிரிப்பே
இவைகளின்
எதிரொளி என்று!!
இம்சை முட்களெல்ளாம்
புறா இறகுகளானது
இவளது நினைப்பாள்
அன்றோ!!!

தேடி அலைகிறேன்

இடுகையிட்டது dinesh

காதல் சுகமான
நெருப்பு என்றார்கள்!
உண்மை தான்
கரும்பாறையான
என் இதயம் கூட
கரும்பாகி விட்டதே!!

காதல் சிணுங்கிடும்
குழந்தை என்றார்கள்!
உணமை தான்
சினுங்கள்களின் சிறையில்
மாட்டிக்கொண்டேனே!!

காதல் உயிரை பருகும்
அமுதம் என்றார்கள்!
உண்மைதான்
என் உயிரோடு
உணர்வுகளும் பறிபோனதே!!

காதல் ஒரு வியாதி
என்றார்கள்!!
அதனால் தான்
அதற்கான மருந்தை
தேடி அலைகிறேன்.

கண்ட நாள்முதலாய்

இடுகையிட்டது dinesh

நீ என்னை பார்க்கும்
போதெல்லாம்
நான் எனது பார்வையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..

நீ என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்
நான் எனது புன்னகையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..

நீ என்னை பார்த்து
பேசும் போதெல்லாம்
நான் எனது வார்த்தைகளை
தேடிக்கொண்டிருக்கிறேன்..

உன்னை கண்ட நாள்முதலாய்
நான் என்னையே
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் உன்னுள் புதைந்தது
தெரியாமல்!!

கொள்ளை

இடுகையிட்டது dinesh

உன் கனவுகள் மட்டும்
போதுமென்றேன்
என் இமைகளை
திருடி விட்டாய்..

உன் நினைவுகளே
என் சுவாசமென்றேன்
என் மூச்சுக்காற்றை
நிறுத்துகிறாய்..

உன் நிழல் தொடர
விரும்புகிறேன்
என் உயிர் வருட
துடிக்கிறாய்..

பெண்ணே நீயேன்ன
கொள்ளைக்காரியா?
நானென்ன
கொள்ளை பொருளா?
கேட்டால் காதலில்
இது சகஐம் என்கிறாயே..!

ஏன் அன்பே இத்தனை கோபம்

இடுகையிட்டது dinesh திங்கள், 13 ஏப்ரல், 2009

அன்பே!
என் இதயமதில்
உன்னை சுமந்து
உன்னை எண்ணி
உனக்காக உயிராக
வாழ்பவனை
ஏன் நீ இன்னும்
கண்டு கொள்ளாமல்
காதலிக்க மறுக்கிறாய்?
நென்சில் நிறைத்து வைத்த
உந்தன் நினைவுகளை
ஏன்? நீ தீயிலிட்டு
கொளுத்த முனைகிறாய்?
இரக்கம் இல்லாமல்
எந்தன் இதயத்தை
ஏன் நீ வெட்ட முனைகிறாய்?
என் அன்பே
ஏன் உனக்கு
என்னில் இத்தனை கோபம்?
தப்பேதும் செய்யாமல்
என்னை ஏன்
தண்டிக்க முனைகிறாய்?
என் எண்ணம் எல்லாம்
உந்தன் நினவை
ஏற்றி வைத்த எந்தன் மனதை
ஏன் அன்பே?
கள்ளன் என்று கயவன் என்று
இரக்கம் இல்லா எந்தன் மீது
கறைகளை அள்ளி வீசுகிறாய்!
என் அன்பே ஏன் உனக்கு?
என்னில் இத்தனை கோபம்?

அடி பெண்ணே!
நீ அழகிதான்
அதறக்காக நீ
எத்தனை பேரை
காதலிப்பாய்?
கட்டலகை காட்டி
காதல் மொழி பேசி
உலகமதில் எத்தனை பேரை
நீ!மணப்பாய்?
வெறி பிடித்து
அலையும் வேடாகியே
காதல் என்ற குறியீட்டால்
இன்னும் எத்தனை பேரை
கற்ப்பழிக்க முனைகிறாய்?
அழகி என்ற ஆணவத்தில்
ஏனடி நீ இன்னும்
சாக்கடைகளை திறக்க
முனைகிறாய்?
பத்தினி போல் வேடம் புளும்
பாதகியே நிறுத்தடி உன்
போலி காதலை
ஏமாற்றி ஏமாற்றி
உன்னால் ஏமந்த மனங்களின்
கண்ணீரில் குழித்தது போதுமடி
நிறுத்தடி உன்
காதல் நாடகத்தை..!

எங்கு போய் ஒளிந்து கொண்டாய்

இடுகையிட்டது dinesh புதன், 1 ஏப்ரல், 2009

காதல் பார்வையால்
என் நெஞ்சை
காயப் படுத்தியவளே!
வசிக மொழியால்
என்னை உன்வசப்
படுத்தியவளே!
காதல் என்ற குறியீட்டால்
எனை கற்ப்பழித்தவளே!
கனவெனும் தேரில் ஏற்றி
எனை இந்த அகிலம் எல்லாம்
காட்டி கொடுத்தவளே!
உந்தன் நினைவு
வானில் எனை தவிக்க விட்டு
நீ மட்டும்
எங்கு போய்
ஒளிந்து கொண்டாய்..?

இதுதான் காதலா?

இடுகையிட்டது dinesh

அன்பே.......
நான் செல்லும்
இடமெல்லாம்
கூடவே உன் நினைவும்
என்னோடு வருகிறதே ...
ஏன்....??

உறங்கும் போது கூட
உன் நினைவோடு.....
என் மனசுமெல்ல
பேச துடிக்கிறதே
ஏன்...??

தலையனையை கட்டியனைத்து
பல முறை
முத்தமிடுகிறதே உதடு...
நீ என நினைத்து
ஏன்...??

எப்பக்கம் திரும்பி பார்த்தாலும்
அப்பக்கம் எல்லாம்-
உன்நிழல் உரு
என் விழியோடுஉரசுகிறதே...
ஏன்....??

யாரேனும் வந்து
எனை விரும்புவதாய்
கூறி விட்டால்.....
அவர் மீது
உமிழ்ந்து விட்டு....
உனை மட்டும் இதயத்தில்...
மனசு கோயில் கட்டி கும்பிடுகிறதே
ஏன்....??

இது தான்...காதலா....??

காதல் நிலா

இடுகையிட்டது dinesh திங்கள், 23 மார்ச், 2009

காகிதங்கள் நனைந்து
காய்கிறது கண்ணீராலே!
பேனாவோ
நடு நடுங்குகிறது
எழுத்துக்களின்
வேகம் கண்டு!

சிந்தனை துளிகள்சேர்த்து
சிற்பியாய் மாறலாமென
சிற்பச் சாயல்களை
படித்து சிறப்பம்சங்கள் வைத்து
சிற்பமாய் செதுக்குகிறேன்
சிந்தனையில் குளிப்பவளை!

கனவுகளில் காணும்
காட்சிகளை கறுப்புப்
பொட்டி கொண்டு
மீட்டுப் பார்த்தாலும்
காயம் கொடுத்தவளை
நிராகரிக்க
காளையிவன் முடியேனடி!

வாக்கியத்தின்
முற்றுப் புள்ளியோடு
முடியாத வரிகள்
முடங்கி முடங்கி
போகும்
ஒற்றையடி பாதையின்
பயணமாய் பயணிக்கிறது
உந்தன் ஒளி தேடி!

இன்பத்துக்குள்ளாகியும்
என்னை இணக்கமில்லாது
ஏறிட்டுப் பார்க்கும்
உந்தன்உறவு கூட
ஓர் புதுமையானதாய்
ஓராயிரம் ஜாடைகள் சொல்லுதடி
இருவருக்கும் மத்தியில்!

காற்றுப் பொதி கூட
காளானை உசிப்பிவிட்டுஎங்கே?
உனது காதலி!
என வினா தொடுத்துவிட்டு
அதோ பாரடா!
உன்னவள் உனக்கு
மேலே
ஒளியாய் இருக்கிறாள்
என்றுஉயிரை விடுகிறது…..!!!!!

காதல் கவிஞனாய்

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009

உனக்கு காக்க வைப்பதில்
சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்

உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பவில்லை

கவிதைக்காய் காத்திருபதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்

காதலனாகத்தான்
காத்திருக்கிறேன்
கவிதையே
காதல் கவிஞனாய்

நீண்டநேரமாய்
காத்திருந்தாலும்
நீ கேட்டால்
ஏன் தான்
சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ

உனக்காய் காத்திருந்த
இடத்தில்
நான் காணாமல்
போயிருந்தால்
கவலைப்படாதே
என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்

கனவு பொழுதில்

இடுகையிட்டது dinesh

என் கல்லூரிப்
பருவத்திற்குள்
ஒரு கனவு பொழுதில்
நடந்து சென்றேன்...

எப்போதும்
அன்னியமாய் பார்க்கும்
என் பள்ளி அதிபர்
இன்று
ஒரு நேசப் பார்வையோடு...

எம் கடனே மூலதனமாய்
கடை நடத்தும்
மனோ அண்ணன்
கண்டது ஏனோ
கருணை பார்வையோடு...

காற்று வாங்க
நான் ஒதுங்கிய
நூலக நிர்வாகி மட்டும்
எப்போதும் போல்
நூதனமாய் பார்த்துக் கொண்டு...

இந்த வெண்மை உடை
பெண்கள்
அட என் கல்லூரி தேவதைகள்
தான்
இன்று மட்டும்
என் அருகே
புன்னகையோடு எப்படியோ...

எல்லாம் சரிதான்
பார்த்து விட்டு
போகட்டும்
பாவம் தானே
நானும் இந்த கனவில்...

பொறுக்கவில்லை
ஒருவனுக்கு வந்துவிட்டான்
கதவை தட்டிகொண்டு
அறை நண்பன் என்னிடத்தில்...

சிறகுகளின் சாவி

இடுகையிட்டது dinesh

கண்ணீரால்
சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால்
தூக்கிவிட்டு
நீ
என்னை
நானாக்கிய போது
என் சிறகுகளின்
சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்
பின்னொரு நாளில்
ஒரு பெரிய
பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும்
கலையை
நானே
அறிந்திருப்பது
அவசியமென்றுஅறிந்துகொண்டேன்

உன்னருகில் நான் வரவே

இடுகையிட்டது dinesh

பிரியம்
என்பது எளிதல்ல,
குறிப்பாக பிரிந்திருக்கும்
தொலை தூரத்தில்.

சந்தேகங்களும்
பயங்களும் சாதாரண
உறவினிடை கொந்தளித்துக்
கொண்டிருக்கும்
இனியும் பிரிந்திருந்தால்

நாமிருந்த
இணையத்தில்
குறைந்தபட்சம்
சிரித்திருந்தோம்,
நம்மின் சந்தேகத்தினிடையே
நலமுடன் நாம்
தெரிந்திருந்தோம்,
நம்மின் கனிவுமிகு காதலினை

அதனால்
நம் பயமெல்லாம்
மாயமாய் மறைந்ததை
நாம் அறிந்துமிருந்தோம்.
ஆனால்
இன்றோ நாம் பிரிந்து உள்ளோம்

அதனால்
சில சமயம் எழும்
சந்தேகங்களை
இயற்கை என
எண்ணிக்கொள்(ல்)வோம்

இமைப்பொழுதில்
உனை நினைக்கையில்
என்றுமில்லாத
எதனையோ இழக்கின்றேன்

உன் புன்னகையின்
மெல்லினத்தை,
உன் அன்புநிறை
சாரீரத்தை,
எனைச்சுற்றி
நீ வளைத்த
உன் இதமான
வளை கரத்தை

உன்மேல்
நான் கொண்ட அன்பு
எத்துனை வலிமையது
என்பதனை உன்னிடம்
நிரூபிக்க விடாமல்
இந்த தூரமும்
என்னை தொந்தரவு செய்கிறது

நீ கொண்டுள்ள பயத்தை,
பாரத்தை
நிரந்தரமாய் நீக்கிடவும்,
உன் கண்ணெதிரே தோண்றி
நிலைத்திருக்கும்
என் அன்பை
உன்னிடத்தில் கொடுத்திடவும்

எனக்கு நீ
எத்துனை உகந்தவள்
என்பதனை இதமாய்
எடுத்துரைத்திடவும்
என் ஏக்கமெல்லாம்
உன்னருகில் நான் வரவே.

உயிர்த் துளிகள்

இடுகையிட்டது dinesh

கொஞ்சம்
கொஞ்சமாக
நானே
உதிர்த்து வைக்கும்
என்உயிர்த் துளிகள்

வாழ்க்கையின்
வாசலிலே
இரத்தப் புள்ளியிட்டு
நரம்புக் கோடுகளால்
வரைந்தகோலங்கள்.

என் இதயத்தைச்
செய்தவளின் பார்வைகள்.
மனிதனாய்ப் பிறந்த
குற்றத்திற்காய்
என் மீது
நானே
நடத்திக் கொண்ட
விசாரணைகள்

இருளைக் கொல்ல
விரலில் கொளுத்திய
நெருப்பு வேதனை
மழையில் நான்
விரித்துப் பிடித்த
தீ குடைகள்.

நீ அஃறிணையாவதா?

இடுகையிட்டது dinesh

நான் சிரிக்க
நீ சிரித்து
நான் அழ
நீ அழுது
நான் முறைக்க
நீ முறைத்து
என் காதலியானாய்....
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு கண்ணாடியும்
இதைத்தானே செய்கிறது

போ என்றேன் போனாய்
வா என்றேன் வந்தாய்
கிட என்றேன் கிடந்தாய்
ஆனாலுமோர் சந்தேகம்
என் வீட்டு நாய்குட்டியும்
இதைத்தானே செய்கிறது

ஏன் இப்படியென்றபோது
எல்லாமே என் மீது
கொண்ட காதலால்
என்றாய்

என் காதலால்
நீ "அஃறிணையாவதா"?
வேண்டவே வேண்டாம்
போய்விட்டேன் என்றே
போயேபோய் விட்டாய்
நல்லவேளைஏனென்று
கேட்கவில்லை
கேட்டிருந்தால்
என்மீது கொண்ட
காதலால் என்றிருப்பாய்.

பிரிதல் கூட வலியில்லை

இடுகையிட்டது dinesh வியாழன், 5 மார்ச், 2009

என் பிறப்பின் பிற்குறிப்பு பிதற்றுகிறது!
உன் பெயரின் முதல்
எழுத்தைநீயோ..............
எழுதித்தான் வைத்தாய்
என் பெயரைகாகிதத்திலா?
இல்லை கனவிலா?

பிரிதல் கூட வலியில்லை
இந்த புரிதலின்மை போல!
நேசக் கூட்டின் நினைவலைகளில்
நீயும் எனக்கொரு
துளிஅமிர்தமா?
விஷமா?

கரைந்து போ இல்லை
காணாமல் போ!
ஆனால்
இருந்து கொண்டு
என்னை இம்சை படுத்தாதே.

போதும் இந்த முகப் பூச்சு
பேதை நெஞ்சில் பெரும் காற்று.
போகப் போக சுழியாச்சு
உன் அன்பு என்னும் ஒரு ஊற்று.

வரம் ஒன்று தா தாயே

இடுகையிட்டது dinesh

நாட்கள் அலட்சியமாய்
அடுத்தவர்களைப் பற்றிச்
சிந்திக்காமலேயே நகர்ந்தபடி
தவறவிட்ட எத்தனையோ
ஆசைகள் தேவைகளைக் காவியபடி
கொஞ்சமாவது
மனச்சாட்சியே இல்லாததாய்

மிகமிகத் தவறிய
உறவுகள் சொந்தங்கள்
தவறினாலும்...
தேடிக்கொண்டேயிருக்கும்
உறவாய் பெற்றவர்கள்
அப்பா...அம்மா

மாறாத ரணமாய்
புரையோடியபடி
அவர்களின் நினைவுகள்
தேவையாயிருக்கிறது
அன்பும் ஆறுதலும் அரவணைப்பும்

வானம் தாண்டிய அடுத்த எல்லையில்
நானும் நீங்களுமாய்
நினைவு வரும்போதெல்லாம்
சுவரில் தொங்கும் நிழற்படத்தில்
கண் பதித்து நிலைகுத்தி
நிற்பது மாத்திரமே முடிகிறது

வாழ்வின் அற்புதங்களாய்
மனதில் பரவிக் கிடக்கும்
வாடாத இரு மலர்களாய் நீங்கள்

ஏங்கும் மனப்புகை கண்குழி பட்டு
ஆவியாகி கண்ணீராய்த் தெறிக்கும்
கன்னம் நனைக்கும் கண்ணீர்
இரவை நனைக்கையில்
தலையணையையும் நனைத்தபடி
சுற்றும் பூமியில் ஆயிரம் உறவுகள்
இருந்தும்...
சுயநலமில்லா உறவு

உங்களுக்காய் காத்திருக்கிறேன்
தளர்ந்துவிட்ட விரல்களின்
வருடலுக்காய்.
தலைகோதும் தழுவலுக்காய்

அம்மா...அம்மா
ஆசையாய் இருக்கிறது
ஒரு முறை
ஒரே ஒரு முறை
உருமாறிச் சிறிதாகும்
வரம் ஒன்று தா தாயே
மீண்டும் கொஞ்சம் குடியிருக்க
உன் இருண்ட கருவறைக்குள்!!!

என்னுள் நீயிருப்பாய்...

இடுகையிட்டது dinesh

காதலே வேண்டாம் என்று
என் இதயத்தைப்
பூட்டி வைத்ததேன்
என்னை அறியாமலே
என் மனதில்-இடம்
பிடித்த காதலியே..

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி
நிற்கும் நம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன் நான்
வாடி மடிந்தாலும்...
நீ வாழ்க என்று....!

நாம் ஒன்றாய்
கழித்த அந்த நினைவுகளை
என் இதயத்தில்
செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கின்றேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும்
பிரித்துச் செல்ல நினைக்காதே......
நானில்லாமல் நீயிருப்பாய்.........
ஆனால்.....
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்..

நினைக்க மறந்த இரவொன்றில்

இடுகையிட்டது dinesh புதன், 4 மார்ச், 2009

உன்னை நினைக்க மறந்த இரவொன்றில்
நிலவின் துணை கொண்டு
எழுதிய கவிதை இது
தயவு செய்து வாசித்துவிடாதே

உன் கண்ணீரை ஏந்தினால்
என்கவிதை இறந்துவிடும்
காலங்கள் கரைந்தாலும்
கரைசேராத நதியாய்
தேங்கியபடியேகிடக்கிறது
என் காதல்

உன்னால்
காதல் எனும் வானத்தில்நாமிருவரும்
பறந்து திரிந்த காலங்களை
எண்ணியபடியே சிறகுகள்
இன்றிதனிமரமாய்
இன்று நான்.

என் காதல் உன்னை
மட்டும் காதலிக்க கற்றுத்தரவில்லை
உன்னைத் தவிர யாரையும்
காதலிக்க கூடாது
என்பதையும்தான் கற்றுத்தந்தது

உன்இரவுகளின் தாலாட்டு
எது என்பதை நானறியேன்
ஆனால்
என் ஒவ்வொரு
விடியலின் ஓசையும்
என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை

நீ என்னோடு இருந்தபோது
ஒவ்வொரு நாளும்
புதுப்பக்கங்களாய் -இருந்தது
என் வாழ்க்கை

இன்று நீ மறந்திருக்கக்கூடும்
உன் இதயத்தை
காதலால்தான்
வாங்கிக் கொண்டேன் என்பதை
ஆனால்
நான் மறக்கவில்லை
நீ வார்த்தைகள் எனும்
அடியாட்களைக் கொண்டு
என்னை அகதியாய்
விரட்டி அடித்ததை

என்றோ ஓர் நாள்
யாரோ ஒருவனுக்கு
சொந்தமாகப்போகும் -உன்
இதயத்தில்
சில மாதங்கள் வாழ்ந்ததில்
சந்தோசப்பட்டாலும் உன்
இதயத்தில் தொடர்ந்துவாழ
வாய்ப்பில்லாமல் போனதைவிட
உன் இதயத்தில் நான்
இறக்காமல் போனதில்
கவலைதான் எனக்கு

உன்னால் என் தனிமைக்கு
மிஞ்சியிருப்பது என் பேனா மட்டும்
பாவம் அது நான் அழுதால்
உடனே அழ அரம்பிக்கிறது இருவரில் யார்
அழுதாலும் உன்னால் குறையப் போவது
எங்கள் ஆயுள்தான்

பாவப்பட்டவன்கைக்கு விலைபோன
பேனா படாதபாடுபடத்தானே வேண்டும்
இன்று
என்னைவிட என் பேனா
அதிகமாக அழுகிறது

பாவம் நான்
எனக்கிருக்கும் உறவை அழ
விட்டு விட்டு என்ன
செய்யப்போகிறேன் -எனவே
உனக்கு சொல்லவந்ததை சொல்லிவிடுகிறேன்
இறந்து போன -என்காதலை
எரிக்க மனமின்றி என்னைக் கொன்று
கொஞ்சம் கொஞ்சமாய்
எரித்து வருகிறேன்

முடிந்தால்
நான் இறந்த மூன்றாம் நாள்-வா
காதல் சாம்பலோடு
என்னையும் சேர்த்து அள்ளலாம்.