கொஞ்சமாக
நானே
உதிர்த்து வைக்கும்
என்உயிர்த் துளிகள்
வாழ்க்கையின்
வாசலிலே
இரத்தப் புள்ளியிட்டு
நரம்புக் கோடுகளால்
வரைந்தகோலங்கள்.
என் இதயத்தைச்
செய்தவளின் பார்வைகள்.
மனிதனாய்ப் பிறந்த
குற்றத்திற்காய்
என் மீது
நானே
நடத்திக் கொண்ட
விசாரணைகள்
இருளைக் கொல்ல
விரலில் கொளுத்திய
நெருப்பு வேதனை
மழையில் நான்
விரித்துப் பிடித்த
தீ குடைகள்.