உயிர்த் துளிகள்

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009
கொஞ்சம்
கொஞ்சமாக
நானே
உதிர்த்து வைக்கும்
என்உயிர்த் துளிகள்

வாழ்க்கையின்
வாசலிலே
இரத்தப் புள்ளியிட்டு
நரம்புக் கோடுகளால்
வரைந்தகோலங்கள்.

என் இதயத்தைச்
செய்தவளின் பார்வைகள்.
மனிதனாய்ப் பிறந்த
குற்றத்திற்காய்
என் மீது
நானே
நடத்திக் கொண்ட
விசாரணைகள்

இருளைக் கொல்ல
விரலில் கொளுத்திய
நெருப்பு வேதனை
மழையில் நான்
விரித்துப் பிடித்த
தீ குடைகள்.