சிறகுகளின் சாவி

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009
கண்ணீரால்
சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால்
தூக்கிவிட்டு
நீ
என்னை
நானாக்கிய போது
என் சிறகுகளின்
சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்
பின்னொரு நாளில்
ஒரு பெரிய
பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும்
கலையை
நானே
அறிந்திருப்பது
அவசியமென்றுஅறிந்துகொண்டேன்