கனவு பொழுதில்

இடுகையிட்டது dinesh சனி, 7 மார்ச், 2009
என் கல்லூரிப்
பருவத்திற்குள்
ஒரு கனவு பொழுதில்
நடந்து சென்றேன்...

எப்போதும்
அன்னியமாய் பார்க்கும்
என் பள்ளி அதிபர்
இன்று
ஒரு நேசப் பார்வையோடு...

எம் கடனே மூலதனமாய்
கடை நடத்தும்
மனோ அண்ணன்
கண்டது ஏனோ
கருணை பார்வையோடு...

காற்று வாங்க
நான் ஒதுங்கிய
நூலக நிர்வாகி மட்டும்
எப்போதும் போல்
நூதனமாய் பார்த்துக் கொண்டு...

இந்த வெண்மை உடை
பெண்கள்
அட என் கல்லூரி தேவதைகள்
தான்
இன்று மட்டும்
என் அருகே
புன்னகையோடு எப்படியோ...

எல்லாம் சரிதான்
பார்த்து விட்டு
போகட்டும்
பாவம் தானே
நானும் இந்த கனவில்...

பொறுக்கவில்லை
ஒருவனுக்கு வந்துவிட்டான்
கதவை தட்டிகொண்டு
அறை நண்பன் என்னிடத்தில்...