என்னுள் நீயிருப்பாய்...

இடுகையிட்டது dinesh வியாழன், 5 மார்ச், 2009
காதலே வேண்டாம் என்று
என் இதயத்தைப்
பூட்டி வைத்ததேன்
என்னை அறியாமலே
என் மனதில்-இடம்
பிடித்த காதலியே..

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி
நிற்கும் நம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன் நான்
வாடி மடிந்தாலும்...
நீ வாழ்க என்று....!

நாம் ஒன்றாய்
கழித்த அந்த நினைவுகளை
என் இதயத்தில்
செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கின்றேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும்
பிரித்துச் செல்ல நினைக்காதே......
நானில்லாமல் நீயிருப்பாய்.........
ஆனால்.....
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்..