எல்லா ஊதுபத்தியும்
எரிந்த பிறகும்
அட்டை பெட்டியில்
ஒட்டி இருக்கிறது
ஊதுபத்தி வாசம்
பூக்கள் எல்லாம்
பறிக்கப்பட்ட பிறகும்
பூங்காவில் தவழ்கிறது
பூ வாசம்
எத்தனைமுறை
கழுவினாலும்
எண்ணை பசை
சுமக்கிறது,நேற்றைய பொழுதில்
ஏற்றிய தீபம்
எல்லாவற்றிலுமே
இருக்கின்றன
பழைய நினைவுகளின்
பதிவுகள்
மணமாகி விட்டதால்
மறந்துவிடு
என்கிறாயே
எப்படி மறப்பேன்
நான் மட்டும்
உன்னை?
பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக
மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக..
கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களக..
தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணிரக..
வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதிதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல் காதலாக..
அழகிய
புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன்
என்கிறாய் நீ
உன் கூந்தலில்
ஒரு ஒற்றை
ரோஜாவை
சூடி விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா
மலர்ந்திருக்கிறது
என்கிறேன் நான்
பவித்திரமானதொரு
புன்னகையை
சிந்துகிறாய்
தரையெங்கும்
மல்லிகைபூக்க்ள்
சிதறுகின்றன.
அமைதியைத்தான்
அதிகம்
விரும்புவேன்
மழைத்துளியின்
அழகைவிட
மண்வாசனையைத்தான்
அதிகம்
விரும்புவேன்
மல்லிகையின்
அழகைவிட
மணத்தைதான்
அதிகம்
விரும்புவேன்
என்றுமே
அழகை மட்டும்
வைத்து எதையும்
ரசித்ததில்லை
முதல் முறையாக
ரசிக்கிறேன்
பூவைவிட
மெல்லிய உன்
அழகிய மனதை!
சாலையோர பூக்கள் ரசிக்கும்
மனது
பட்டாம் பூச்சியாய்
சுற்றித்திரியும் வாழ்க்கை
கண்ணீருக்கு கூட அர்த்தம்
அறியாத விழிகள்
எப்போதும் என்னுடன்
இருக்கும் உதட்டோர
குறும்பு புன்னகை
மழலை மொழிரசிக்கும்
நெஞ்சம்
இரவு நேர மெல்லிசை
இளமை கால
இலட்சியங்கள்
இவை எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு உன்
கதலுக்காக
காத்திருக்கும் போது
உணருகிறேன்.
உன் "சம்மதம்" என்கிற
ஒற்றை வார்த்தையால்
திருப்பி தர முடியுமா?
சுயம் தொலையாத என்னை!