புன்னகையை சிந்துகிறாய்

இடுகையிட்டது dinesh செவ்வாய், 5 மே, 2009
அழகிய
புடவையொன்றில்
என் முன் நின்று
எப்படி இருக்கிறேன்
என்கிறாய் நீ

உன் கூந்தலில்
ஒரு ஒற்றை
ரோஜாவை
சூடி விட்டு
நம் காதல்செடியில்
ரோஜா
மலர்ந்திருக்கிறது
என்கிறேன் நான்

பவித்திரமானதொரு
புன்னகையை
சிந்துகிறாய்
தரையெங்கும்
மல்லிகைபூக்க்ள்
சிதறுகின்றன.