மனது
பட்டாம் பூச்சியாய்
சுற்றித்திரியும் வாழ்க்கை
கண்ணீருக்கு கூட அர்த்தம்
அறியாத விழிகள்
எப்போதும் என்னுடன்
இருக்கும் உதட்டோர
குறும்பு புன்னகை
மழலை மொழிரசிக்கும்
நெஞ்சம்
இரவு நேர மெல்லிசை
இளமை கால
இலட்சியங்கள்
இவை எல்லாவற்றையும்
தொலைத்துவிட்டு உன்
கதலுக்காக
காத்திருக்கும் போது
உணருகிறேன்.
உன் "சம்மதம்" என்கிற
ஒற்றை வார்த்தையால்
திருப்பி தர முடியுமா?
சுயம் தொலையாத என்னை!