எரிந்த பிறகும்
அட்டை பெட்டியில்
ஒட்டி இருக்கிறது
ஊதுபத்தி வாசம்
பூக்கள் எல்லாம்
பறிக்கப்பட்ட பிறகும்
பூங்காவில் தவழ்கிறது
பூ வாசம்
எத்தனைமுறை
கழுவினாலும்
எண்ணை பசை
சுமக்கிறது,நேற்றைய பொழுதில்
ஏற்றிய தீபம்
எல்லாவற்றிலுமே
இருக்கின்றன
பழைய நினைவுகளின்
பதிவுகள்
மணமாகி விட்டதால்
மறந்துவிடு
என்கிறாயே
எப்படி மறப்பேன்
நான் மட்டும்
உன்னை?