தனித்த இரவுகளில்

இடுகையிட்டது dinesh செவ்வாய், 5 மே, 2009
பிரிந்தும் பிரியாமல்
சேர்ந்தே இருக்கின்றன
கல்லூரி மரங்களில்
சிற்பமாக

மறந்துவிட்டதாய்
சொல்லிக்கொண்டு
தினமும் எழுதப்படுகின்றன
கடவுச்சொல்லாக..

கடற்கரை காலடிச்சுவடுகளில்
புதைந்துகிடக்கின்றன
மறக்கப்பட்ட சத்தியங்களக..

தனித்த இரவுகளில்
முகமூடி இழந்து
வழிகின்றன கண்ணிரக..

வலிகள் பல சுமந்தாலும்
தினம் தினம் புதிதாய்
பிறக்கத்தான் செய்கின்றது
காதல் காதலாக..