காதல் கடிதங்கள்

இடுகையிட்டது dinesh ஞாயிறு, 19 ஏப்ரல், 2009
அன்று
நீ எனக்கும்
நான் உனக்கும்
எழுதிய காதல் கடிதங்கள்
கலையாத
கனவுகாளாய்..!

மனதில்
புதைந்து போயிருந்த
உணர்வுகளை
பேனா மையில்
கொட்டி தீர்த்து குதுகலித்த
காகித
காலங்களாய்..!

கொட்டும்
மழையில் நீ நனையாமலிருக்க
நனைந்துகொண்ட
ஈரமான
நினைவுகளாய்..!

ஆம்
பாட்டும்
கூத்தும் பரவசமும் நிறைந்த
அந்நாளில்
உன் வார்த்தை மகுடிக்குள்
பெட்டி பாம்பாய்
என்னை அடக்கி வைத்து ரசித்த
அதிசயம் நீ..!

இன்று
அதே ஊரில் நானும்
கரிசல் மண்ணில்
உன் நினைவுகளும்
ஆனால்
நீ மட்டும் இல்லை.!!