போதெல்லாம்
நான் எனது பார்வையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..
நீ என்னை பார்த்து
சிரிக்கும் போதெல்லாம்
நான் எனது புன்னகையை
தேடிக்கொண்டு இருக்கிறேன்..
நீ என்னை பார்த்து
பேசும் போதெல்லாம்
நான் எனது வார்த்தைகளை
தேடிக்கொண்டிருக்கிறேன்..
உன்னை கண்ட நாள்முதலாய்
நான் என்னையே
தேடிக்கொண்டிருக்கிறேன்..!
நான் உன்னுள் புதைந்தது
தெரியாமல்!!