ஏன் அன்பே இத்தனை கோபம்

இடுகையிட்டது dinesh திங்கள், 13 ஏப்ரல், 2009
அன்பே!
என் இதயமதில்
உன்னை சுமந்து
உன்னை எண்ணி
உனக்காக உயிராக
வாழ்பவனை
ஏன் நீ இன்னும்
கண்டு கொள்ளாமல்
காதலிக்க மறுக்கிறாய்?
நென்சில் நிறைத்து வைத்த
உந்தன் நினைவுகளை
ஏன்? நீ தீயிலிட்டு
கொளுத்த முனைகிறாய்?
இரக்கம் இல்லாமல்
எந்தன் இதயத்தை
ஏன் நீ வெட்ட முனைகிறாய்?
என் அன்பே
ஏன் உனக்கு
என்னில் இத்தனை கோபம்?
தப்பேதும் செய்யாமல்
என்னை ஏன்
தண்டிக்க முனைகிறாய்?
என் எண்ணம் எல்லாம்
உந்தன் நினவை
ஏற்றி வைத்த எந்தன் மனதை
ஏன் அன்பே?
கள்ளன் என்று கயவன் என்று
இரக்கம் இல்லா எந்தன் மீது
கறைகளை அள்ளி வீசுகிறாய்!
என் அன்பே ஏன் உனக்கு?
என்னில் இத்தனை கோபம்?