விழிகளை பறித்தவள்

இடுகையிட்டது dinesh புதன், 15 ஏப்ரல், 2009
தென்றலாய்.
வந்தென்னை
தீண்டியவள் நீ!
மின்னலாய் வந்தென்தன்
விழிகளை பறித்தவள் .நீ!

கவியாக மாறி எனக்குள்
காதலை சொன்னவள் நீ!
உடலோடு ஒட்டிய
உயிரானவள் நீ!

உதயத்தின் கீற்றாகி
ஒளி கொடுத்தவள் நீ!
வானத்து நிலாவாகி எனக்குள்
வந்துதித்தவள் நீ!

பெண் என்ற சொல்லுக்கு
பெருமை இட்டவள் நீ!
நட்ப் பென்ற சொல்லுக்கு
நம்பிக்கை இட்டவள் நீ!

புமியிலே காதலை பரப்பி
விட்டவள் நீ!
என்தன் விழிகளிற்க்கு ஒளியாகி
பார்வை இட்டவள் நீ!

சிலுவையாய் உன் நினைவுகளை
என்னில் சுமக்க விட்டவள் நீ!
இத்தனையும் செய்தவளே!
ஏனடி!
இன்றென்னை வெறுத்தாய்..?

என் நினைவுகளை எறிந்தாய்..?
எனை கண்ணீரில்
வாழ விட்டு
எனை ஏண்டி மறந்தாய்.?