நான் செல்லும்
இடமெல்லாம்
கூடவே உன் நினைவும்
என்னோடு வருகிறதே ...
ஏன்....??
உறங்கும் போது கூட
உன் நினைவோடு.....
என் மனசுமெல்ல
பேச துடிக்கிறதே
ஏன்...??
தலையனையை கட்டியனைத்து
பல முறை
முத்தமிடுகிறதே உதடு...
நீ என நினைத்து
ஏன்...??
எப்பக்கம் திரும்பி பார்த்தாலும்
அப்பக்கம் எல்லாம்-
உன்நிழல் உரு
என் விழியோடுஉரசுகிறதே...
ஏன்....??
யாரேனும் வந்து
எனை விரும்புவதாய்
கூறி விட்டால்.....
அவர் மீது
உமிழ்ந்து விட்டு....
உனை மட்டும் இதயத்தில்...
மனசு கோயில் கட்டி கும்பிடுகிறதே
ஏன்....??
இது தான்...காதலா....??