தேடி அலைகிறேன்

இடுகையிட்டது dinesh புதன், 15 ஏப்ரல், 2009
காதல் சுகமான
நெருப்பு என்றார்கள்!
உண்மை தான்
கரும்பாறையான
என் இதயம் கூட
கரும்பாகி விட்டதே!!

காதல் சிணுங்கிடும்
குழந்தை என்றார்கள்!
உணமை தான்
சினுங்கள்களின் சிறையில்
மாட்டிக்கொண்டேனே!!

காதல் உயிரை பருகும்
அமுதம் என்றார்கள்!
உண்மைதான்
என் உயிரோடு
உணர்வுகளும் பறிபோனதே!!

காதல் ஒரு வியாதி
என்றார்கள்!!
அதனால் தான்
அதற்கான மருந்தை
தேடி அலைகிறேன்.