சுகமென்றால்
எனக்கு காத்திருப்பதில்
அதிக சுகம்
உன் தூக்கம் கலைக்க
விரும்பவில்லை
உன் தூக்கம் கலையும் வரை
காத்திருக்கத்தான் விரும்பவில்லை
கவிதைக்காய் காத்திருபதில்
கவிதை பிறப்பது
எனக்கு மட்டும்தான்
காதலனாகத்தான்
காத்திருக்கிறேன்
கவிதையே
காதல் கவிஞனாய்
நீண்டநேரமாய்
காத்திருந்தாலும்
நீ கேட்டால்
ஏன் தான்
சில நேரமாய்
என்றுபொய் சொல்லுகிறேனோ
உனக்காய் காத்திருந்த
இடத்தில்
நான் காணாமல்
போயிருந்தால்
கவலைப்படாதே
என் கால்களின்
கவிதைகளையாவது
விட்டுத்தான் போயிருப்பேன்