பிரிதல் கூட வலியில்லை

இடுகையிட்டது dinesh வியாழன், 5 மார்ச், 2009
என் பிறப்பின் பிற்குறிப்பு பிதற்றுகிறது!
உன் பெயரின் முதல்
எழுத்தைநீயோ..............
எழுதித்தான் வைத்தாய்
என் பெயரைகாகிதத்திலா?
இல்லை கனவிலா?

பிரிதல் கூட வலியில்லை
இந்த புரிதலின்மை போல!
நேசக் கூட்டின் நினைவலைகளில்
நீயும் எனக்கொரு
துளிஅமிர்தமா?
விஷமா?

கரைந்து போ இல்லை
காணாமல் போ!
ஆனால்
இருந்து கொண்டு
என்னை இம்சை படுத்தாதே.

போதும் இந்த முகப் பூச்சு
பேதை நெஞ்சில் பெரும் காற்று.
போகப் போக சுழியாச்சு
உன் அன்பு என்னும் ஒரு ஊற்று.